Sun. Oct 6th, 2024

“வள்ளலார் இருந்திருந்தால் மகளிருக்கான இடஒதுக்கீட்டை பாராட்டியிருப்பார் – பிரதமர் மோடி உரை!

இன்று வள்ளலாரின் 200வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்,

வள்ளலாரின் ஆன்மீக கருத்துக்கள் இன்றும், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிக்கிறது.

அவர் சக மனிதர்கள் மீதான கருணையை வலியுறுத்தி ஜீவகாருண்யத்தை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை முறையில் நம்பிக்கை கொண்டிருந்தார்.

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் கடவுளின் அம்சத்தை கண்டவர் வள்ளலார்.

வள்ளலார் இருந்திருந்தால் மகளிருக்கான இடஒதுக்கீட்டை நிச்சயம் பாராட்டியிருப்பார்.

வள்ளலாரின் போதனைகள் அனைவரது வளர்ச்சிக்காகவும், சமத்துவ சமுதாயத்தை வலியுறுத்துவதாகவும் இருந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.