Mon. Jul 8th, 2024

நெல்லையில் இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த 17 வயது சிறுவன் – அதிர வைக்கும் சம்பவம்!

நெல்லையில் இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த 17 வயது சிறுவனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்தவர் சந்தியா (18). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுடன் நட்பாக பழகி வந்தார். இதனையடுத்து, சிறுவன் சந்தியாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், இவருடைய காதலை சந்தியா ஏற்க மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் சந்தியாவை கொடூரமாக வெட்டி கொலை செய்து தலைமறைவானான். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து விரைந்து வந்த போலீசார் சந்தியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில், சிறுவன் முனைஞ்சிப்பட்டி கிராமத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு போலீசார் விரைந்தனர். போலீசாரை பார்த்ததும் பயந்து ஓடிய சிறுவனை துரத்திச் சென்று அவனை பிடித்தனர்.

அப்போது, தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் அவன் கழுத்தை அறுத்துக்கொண்டான். இதனையடுத்து, அவனை மீட்டு போலீசார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அப்போது, அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பலமுறை அவளிடம் நான் என் காதலை சொன்னேன். ஆனால், அவள் கேட்கவில்லை. அவள் இல்லாத உலகத்தில் வாழ எனக்கு விருப்பமில்லை. ஆதலால் என்னை தூக்கிலிட்டுவிடுங்கள் என்று போலீசாரிடம் சிறுவன் வாக்குமூலம் கொடுத்தான்.