Mon. Jul 8th, 2024

“ரங்காயணம்” பலரும் அறியாத உண்மை நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்ட தெய்வீக ஆவண படம்!

பாம்பே கண்ணன் சமீபத்திய தயாரிப்பான “ரங்காயணம்” பலரும் அறியாத உண்மை நிகழ்வுகளை ஆதாரமாகக் கொண்டு தெய்வீக ஆவண படம் வெளியாகியுள்ளது.

700 ஆண்டுகளுக்கு முன்னால் 14 ம் நூற்றாண்டில் ஒரு அந்நியர் படையெடுப்பில் திருவரங்கம் கோவில் சூறையாடப்பட்டது அந்த தருணத்தில் ஆச்சாரியார் பிள்ளை லோகாச்சாரியார் தலைமையில் 52 பக்தர்கள் அடங்கிய குழு அழகிய மணவாளனை சுமந்து கொண்டு காடு மலை எனப்பாராமல் 48 ஆண்டுகள் காப்பாற்றி திருவரங்கம் திரும்பி வந்த சரித்திர நிகழ்வுதான் இந்த தொலைக்காட்சி ஆவணத்தின் கரு 52 பேர் அடங்கிய இந்த பயணம் விஜயநகர பேரரசில் முடிவுறும் போது எஞ்சியது ஒருவரே.

இந்த ஆவணப்படம் தயாரிப்பில் 48 ஆண்டுகள் அரங்கன் தங்கி பூஜிக்கப்பட்ட ஊர்களுக்கு நேரடியாகவே சென்று படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். இந்த நிகழ்வுகளை பாம்பே கண்ணன் தொகுத்து வழங்கியுள்ளார்.

பாம்பே கண்ணன் ஒலிப்புத்தகம் மற்றும் தொலைக்காட்சி படங்கள் தயாரிப்பாளர் இயக்குனர் எழுத்தாளர் நடிகர் என 50 ஆண்டுகளுக்கு மேல் இத்துறையில் அனுபவம் உள்ள இவர் இதுவரையில் 25 சரித்திர சமூக நாவல்களை ஒலிப்புத்தகங்களாக வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

மேலும் விவரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய எண் :
பாம்பே கண்ணன்
9841153973