NEWSCLICK அலுவலகத்துக்கு சீல் – டெல்லி போலீசார் அதிரடி!
இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK அலுவலகத்துக்கு டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறை சீல் வைத்துள்ளது.
இணையதள செய்தி நிறுவனமான NEWSClickல் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் சோதனை செய்தனர். பத்திரிகையாளர்களிடமிருந்து மொபைல், ஃபோன், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை ஏற்கெனவே அந்நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் கீழ் நியூஸ் கிளிக்கிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK அலுவலகத்துக்கு டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறை சீல் வைத்துள்ளது.