Sun. Oct 6th, 2024

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயரதிகாரிகளின் 2 நாள் மாநாடு – முதலமைச்சர் தலைமையில் இன்று தொடக்கம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் அதிகாரிகள் பங்குபெறும் 2 நாள் மாநாடு சென்னையில் இன்று நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தும் திட்டங்கள், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு போன்றவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு இன்று சென்னையில் தொடங்குகிறது.

110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள், மானிய கோரிக்கையின்போது வெளியான அறிவிப்புகளின் நிலை குறித்தும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய இருக்கிறார்.