Sun. Oct 6th, 2024

பணக்கஷ்டம் நீங்க வேண்டுமா? அப்போது பூஜை அறையில் இந்த பொருளை மட்டும் வைத்தால் போதும்!

நாம் அனைவரும் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்வோம். அப்படி பூஜை செய்யும்போது ஒரு முக்கியமான பொருளை வைத்து பூஜை செய்தால் நம் வீட்டில் இருக்கும் தீய சக்தி, வறுமை, பணக்கஷ்டம் வெளியேறி நன்மை பெருகும்.

சரி வாங்க எப்படி பூஜை செய்ய வேண்டும் என்று பார்ப்போம் –

நாம் பூஜை செய்யும்போது கடவுளுக்கு நைவேத்தியம் செய்வோம். நைவேத்தியம் செய்யும்போது, ஒரு டம்ளர் அல்லது பஞ்சபாத்திரத்தில் தண்ணீர் வைத்து தான் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

நீருக்கு கண் திருஷ்டி, தீய சக்திகள், எதிர்மறை ஆற்றல்களை அழிக்கும் சக்தி உள்ளது. பூஜை அறையில் இருக்கும் தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும்.

பூஜை அறையில் வைக்கப்படும் தண்ணீர் கால்படாத இடத்தில் ஊற்ற வேண்டும்.

கடவுளுக்கு படைக்கும் தண்ணீரில் பச்சை கற்பூரம், லவங்கம், துளசி சேர்த்து வைத்தால் நன்மை பயக்கும். அந்த தண்ணீர் தீர்த்தமாக மாறி, புனித தன்மை பெறும். புனிதமாக மாறும் தண்ணீரில் லட்சுமி தேவி வாசம் வரும்.

தண்ணீரை கொண்டு சுவாமிக்கு நைவேத்தியம் செய்யும் போது இறைசக்தி அதிகரிக்கும்.

தீர்த்த தண்ணீரை கீழே கொட்டுவதற்கு பதிலாக, சிறிது நாம் குடித்து, வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு குடிக்க கொடுக்கலாம். மீதமுள்ள தண்ணீரை வீடு முழுவதும் தெளிக்கலாம்.

வாரத்தில் ஒரு தடவையாவது தீர்த்த தண்ணிரை வீட்டில் தெளிக்கலாம். இதனால் வீட்டில் பணக் கஷ்டம் இருக்காது. தோஷம் நீங்கும்.