Mon. Jul 8th, 2024

எங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு வரும் வரை கருத்து கூற மாட்டோம் – வானதி சீனிவாசன்!

தமிழகத்தில் பாஜகவிற்கும், அதிமுக இடையே மோதல் நிலவி வருகிறது. சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகுவதாக அதிமுக தலைமை அறிவித்தது.

இந்நிலையில், கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ வானதி சீனிவாசன் தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பேசுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் எங்கள் தலைவர்கள் பேசிக் கொண்டு வருகிறார்கள். ஒவ்வொரு கட்சிக்கும் தனி செயல்பாடு உள்ளது. ஒவ்வொரு கட்சியிலும் அவர்கள் போற்றுகின்ற தலைவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது தான் கூட்டணி. எனவே, தேசிய தலைமையிடமிருந்து எங்களுக்கு தெளிவான தகவல் வரும் வரை கூட்டணி முறிவு குறித்து நாங்கள் எதுவும் பேசமாட்டோம் என்றார்.