Sun. Oct 6th, 2024

நான் எதையும் கூற விருப்பம் இல்லை…. – ஜெயக்குமார் பேட்டி!

சமீபத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக கிடையாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதிமுக கட்சியில் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட முடிவுதான். இந்த முறிவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைதான் காரணம். முதலில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்தார். பின்னர் மன்னிப்பு கேட்டார். இதனையடுத்து, தற்போது அண்ணா குறித்தும் அண்ணாமலை விமர்சனம் செய்து கொண்டு வருகிறார் என்றார்.

இதனையடுத்து, அதிமுகவினருக்கும், பாஜகவினருக்கும் இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. இதனால், இரு தரப்பினரும் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், பாஜக குறித்தோ, அண்ணாமலை குறித்தோ எந்த கருத்தையும் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. அதிமுக நிலைப்பாடு முன்பே அறிவித்துவிட்டேன். மேற்கொண்டு எதையும் பேச நான் தயாராக இல்லை. தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு புதிய பெயரா? என்ற கேள்விக்கு, தேர்தல் நெருங்கும்போது கட்சி தலைமை, பொதுச்செயலாளர் முடிவெடுப்பார் என்றார்.