Mon. Jul 8th, 2024

15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன் – அதிர்ச்சி சம்பவம்!

15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த அண்ணனால் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம், கபுர்தலாவைச் சேர்ந்த பெண்ணுக்கு 2 மகள் உள்ளனர். இதில் இளைய மகள் (15) அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

சில நாட்களாக கடுமையான வயிற்றுவலியால் சிறுமி துடிதுடித்துள்ளார். வயிறு வீங்கியும் இருந்தது. சந்தேகப்பட்ட தாய் பலமுறை சிறுமியிடம் என்ன பிரச்சினை என்று கேட்டும், சிறுமி ஏதும் சொல்லாமல் மவுனம் காத்து வந்தார். ஒரு கட்டத்தில் தாய் சிறுமியை மிரட்டியபோது, சிறுமி நடந்த விவரத்தை கூறியுள்ளார்.

தனது சகோதரர் முறை கொண்ட உறவினர் கேஷவ் ஜித் சிங் கடந்த 8 மாதமாக என்னை மிரட்டி என்னிடம் தப்பாக நடந்து கொண்டார் என்று சிறுமி கூறியுள்ளார். இதனையடுத்து, சந்தேகமடைந்த தாய் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு பரிசோதனை நடத்தினார்.

அப்போது, சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சிறுமியின் தாய், சுல்தான்பூர் லோதி காவல் நிலையத்தில் கேஷவ்ஜித் சிங் மீது புகார் கொடுத்தார். இந்த புகாரை பதிவு செய்த போலீசார், கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவுக்கார அண்ணனே தங்கையை மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.