Mon. Jul 8th, 2024

அடுத்த விராட் கோலியாக சுப்மன் கில் வலம் வருவார் – ரெய்னா புகழாரம்!

இந்திய கிரிக்கெட் உலகில் அடுத்த விராட் கோலியாக சுப்மன் கில் வலம் வருவார் என்று ரெய்னா புகழாரம் சூட்டியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 அடுத்த மாதம் 5ம் தேதி இந்தியாவில் நடைபெற உள்ளது. சென்னை, மும்பை, ஆமதாபாத், பெங்களூரு, டெல்லி உள்பட இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. தற்போது இப்போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களின் பட்டியல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், “உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவின் மிக முக்கியமான வீரராக சுப்மன் கில் இருப்பார் என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியாவின் மிக முக்கியமான வீரராக சுப்மன் கில் இருப்பார். இவர் அடுத்த விராட் கோலி ஆக வேண்டும் என நினைக்கிறார். ஏற்கெனவே அந்த பண்புகளை அவர் அடைந்துவிட்டார். உலகக்கோப்பைக்கு பிறகு அவரைப் பற்றி நாம் அடிக்கடி பேச வேண்டி இருக்கும் என்று ரெய்னா புகழாரம் சூட்டியுள்ளார்.