Sun. Oct 6th, 2024

மோடியே பிரதமராக வரவேண்டும் – செல்லூர் ராஜூ பேட்டி!

மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என விரும்புகிறோம் என்று முன்னாள் அதிமுக அமைச்சரும், மதுரை மாநகர மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழக முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

கட்சியில் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட முடிவைத்தான் நான் தெரிவிக்கிறேன். இந்த முறிவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைதான் காரணம்.

முதலில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்தார். பின்னர் மன்னிப்பு கேட்டார். இதனையடுத்து, தற்போது அண்ணா குறித்தும் அண்ணாமலை விமர்சனம் செய்து கொண்டு வருகிறார்.

சமீப காலமாக அதிமுகவினருக்கும், பாஜகவினருக்கும் இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. இதனால், இரு தரப்பினரும் கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர். இனி அதிமுக கூட்டணியில் பாஜக கிடையாது என்றார்.

இந்நிலையில், இன்று திமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார்.

அப்போது அவர் பேசுகையில், அண்ணாமலை பாஜகவை வளர்ப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மீண்டும் பிரதமராக மோடியே வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவுக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி என பாஜக தேசிய தலைமை அறிவிக்க வேண்டும் என்றார்.