Mon. Jul 8th, 2024

சாலையோரம் தூங்கிய பெண் – தலையில் கல்லைப் போட்டு கொன்று பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்!

திருப்பூர் மாவட்டத்தில், சாலையோரமாக தூங்கிய பெண்ணின் தலையில் கல்லைப் போட்டு கொன்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் சாலையோரமாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்பகுதியில் இருந்த கேமராவை போலீசார் ஆய்வு செய்த போது, தூங்கிய பெண்ணின் தலைமீது கல்லைப் போட்டு, கொடூரமாக தாக்கி, கொலை செய்து பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ பதிவாகியிருந்தது.

இதனையடுத்து, கண்காணிப்பு கேமரா மூலம் குற்றவாளியை போலீசார் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் ஹில்டன் என்றும், இவர் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் என்பது தெரியவந்தது.

மனநலம் பாதித்த பெண்ணை கொடூரமாக தாக்கி, இளைஞர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.