காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு! உரிமையாளரும் பலி..!


இதில் அங்கிருந்த ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கி படுகாயம் அடைந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஷேர் ஆட்டோக்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

ஆலையில் நடந்த வெடி விபத்தின் சத்தம் சுமார் 5 கி.மீட்டர் அளவுக்கு உணரப்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் ஆலையில் பணிபுரிந்து கொண்டிருந்த 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 2 பெண்கள் உள்பட 6 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் படுகாயமடைந்தோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பட்டாசு குடோன் வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 8 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே, பசுமை பட்டாசு உற்பத்தி குறித்த யுக்திகளை அனைத்து பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கும் பயிற்சி அளிக்காதது, சீன பட்டாசுகளின் சட்டவிரோத இறக்குமதியை தடுக்க இயலாமை போன்றவற்றால் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரமே போராட்டமாக இருக்கும் நிலையில் இப்படி இயங்கக் கூடிய தொழிற்சாலைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யாமல் இருப்பதுதான் இது போன்ற விபத்துகள் தொடர்கதையாகி வருவதற்கு காரணம். இதை சரி செய்து அப்பாவி தொழிலாளர்களின் உயிர் பலியை தடுக்க தமிழ்நாடு அரசு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாகவும் உள்ளது.