Sun. Oct 6th, 2024

காதலனை தேடி சென்னை வந்த மேற்கு வங்க பெண் | போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு |

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், சிவசங்கர் நகர், அண்ணா நெடுஞ்சாலையில் நீண்ட நேரமாக மொழி தெரியாத இளம்பெண் ஒருவர் சுற்றித் திரிந்த பெண் புரியாத மொழி பேசி பல்வேறு நபர்களிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார்.

இதனை கண்ட அவ்வழியே வந்த ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண்ணை ஆட்டோவில் ஏற்றிச் சென்று சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசாரின் விசாரணையில் அந்த பெண் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஜூம்மா (22) என்பது தெரியவந்தது. இவர் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளை பெற்று கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ஒரு வருடம் முன்பு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் ஹோப்பின் என்ற மேற்கு வங்கத்தை சேர்ந்த மற்றொரு இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஹோப்பின் சில தினங்களுக்கு முன்பு ஜூம்மாவிடம் போனில் சென்னையில் தான் மேஸ்திரி வேலை செய்து வருவதாகவும், சென்னை வரும்படி கூற காதலனின் வார்த்தையை நம்பி ரயில் ஏறி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து இறங்கி காதலனை செல்போனில் தொடர்பு கொண்டால் செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரைத் தேடி ஊர் ஊராக சுற்றித் திரிந்து உள்ளார். என்று தெரியவர பின்னர் இளம்பெண்ணை போலீசார் அனகாபுத்தூரில் உள்ள சாய் இல்லத்தில் ஒப்படைத்தனர்.

காதலித்து சென்னை வரவைத்து விட்டு மோசடி செய்த காதலன் ஹோப்பினை சங்கர் நகர் போலீசார் சைபர் க்ரைம் போலீசாரின் உதவியுடன் தேடி வருகின்றனர்…

நிருபர் மா வீரன்