Sun. Oct 6th, 2024

ஊஞ்சல் கயிறு கழுத்தில் மாட்டி சிறுவன் உயிரிழந்த பரிதாபம்…

ஊஞ்சல் கயிறு கழுத்தில் மாட்டி சிறுவன் உயிரிழந்த பரிதாபம்…

சென்னை அபிராமபுரம் கட்டபொம்மன் முதல் தெருவை சேர்ந்த ஆறுமுகம் இவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி வீட்டு வேலை செய்து வருபவர். இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தை கீர்த்திநாதன் (7).நேற்று சாந்தி வேலைக்கு சென்ற நேரத்தில் ஆறுமுகம் இரவு பணி முடித்து வந்து உறங்க சென்றுவிட்டார். அப்போது வீட்டில் இருந்த அவரது மகன் ஊஞ்சல் கட்டி விளையாட முயற்சி செய்துள்ளான். அப்போது கயிறு தவறுதலாக கழுத்தில் முறுக்கிக் கொள்ள, மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். மதிய வேளையில் பக்கத்து வீட்டு பெண்மணி பார்த்த போது குழந்தை உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

பேராண்மை செய்தி குழு