Sun. Oct 6th, 2024

வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்களை பற்றி | காவலன் ஆப் மூலம் தகவல் கூறிய பெண் |

வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்களை பற்றி | காவலன் ஆப் மூலம் தகவல் கூறிய பெண் |

சென்னை கொருக்குபேட்டை ஓஸ்வால் கார்டனில் குடியிருப்பவர் அனிதா சுரானா (47). இவரது வீட்டில் தனியாக இருக்கும்போது அத்துமீறி இவரிடம் தவறான நோக்கத்தில் வீட்டிற்குள் இரண்டு மர்ம நபர்கள் நுழைந்து உள்ளனர்.இதனை கண்ட அந்த பெண் உடனே தனது செல்போனில் உள்ள காவலன் செயலியில் அந்த இரண்டு மர்ம நபர்களை புகைப்படம் எடுத்து உடனே அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த ஆர்.கே.நகர் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து அந்த 2 மர்ம நபர்களையும் கைது செய்து தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் சலீம் மற்றும் தாவூத் என தெரியவந்தது. மேலும் இவர்கள் போலீசாரை கண்டதும் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்ற பின்பு காவல் நிலையம் அழைத்து சென்று இருவரிடமும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்…

பேராண்மை செய்தி குழு