Sun. Oct 6th, 2024

மகளிர் விடுதி நடத்தும் பெண் மீது | பி.வாசு காவல் நிலையத்தில் புகார் |

தனது வீட்டின் வாடகை தரவில்லை என காவல் நிலையத்தில் | இயக்குனர் பி வாசு புகார் |

சென்னை கோடம்பாக்கத்தில் திரைப்பட இயக்குனர் பி.வாசு தனது வீட்டிற்கு வாடகை 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தரவில்லை என்று ஜானகி என்ற பெண் மீது புகார் அளித்துள்ளார்.

கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 6-வது தெருவில் திரைப்பட இயக்குனர் பி.வாசுக்கு சொந்தமான வீடு உள்ளது. அதனை ஜானகி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அந்த இடத்தில் ஜானகி என்ற பெண் சக்தி மகளிர் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். மாதம் ஒன்றுக்கு 75 ஆயிரம் ரூபாய் வீதம் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கி தர வேண்டும் அதனை கேட்டால் தர மறுப்பதாகவும், வீட்டை காலி செய்யவும் மாட்டேன் என்று தெரிவிப்பதாகவும் கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் இயக்குனர் பி.வாசு புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் கோடம்பாக்கம் காவல்துறை ஆய்வாளர் பழனி விசாரணை மேற்கொண்டபோது சக்தி மகளிர் வடுதி நடத்தக்கூடிய ஜானகி முறையாக விடுதிக்கு உண்டான அனுமதி பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது. அதேபோன்று வாசுவிடம் சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கு மேலாக வாடகை தராமல் ஏமாற்றிய வந்ததும் தெரியவர இது குறித்து மேலும் போலீசார் விசாரணை நடைபெற்று வருகின்றனர்…

பேராண்மை செய்தி குழு