கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் | ஐந்து இளைஞர்கள் கைது |
![](https://www.peranmai.com/wp-content/uploads/2019/11/IMG-20191119-WA0312.jpg)
கள்ளக்காதல் விவகாரத்தில் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் | ஐந்து இளைஞர்கள் கைது |
சென்னை கொளத்தூரை அடுத்த விநாயக புரத்தில் வசித்து வந்த அன்சர் பாஷா (31) ஆட்டோ டிரைவரான இவர் நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு கொளத்தூர் ரெட்டேரி சந்திப்பு அருகே ஆட்டோவை நிறுத்தி விட்டு தனது கள்ளக் காதலியான லட்சுமியுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் ஆட்டோவில் இருந்த அன்சர் பாஷாவை கத்தியால் தாக்கியுள்ளனர். ஆட்டோவிலிருந்து இறங்கி தப்பி ஓடிய அன்சர் பாஷாவை விரட்டி சென்ற மர்ம நபர்கள் சாலையின் நடுவே மடக்கி முகத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடுவிட்டனர். படுகாயம் அடைந்த அன்சர் பாஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்…
![](https://www.peranmai.com/wp-content/uploads/2019/11/IMG-20191119-WA0315.jpg)
![](https://www.peranmai.com/wp-content/uploads/2019/11/IMG-20191119-WA0312.jpg)
![](https://www.peranmai.com/wp-content/uploads/2019/11/IMG-20191119-WA0313.jpg)
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தந்ததும் துணை கமிஷனர் முத்துசாமி, உதவி கமிஷனர்கள் அகஸ்டின் ஜான்பால், ஜெயராமன் மற்றும் ஆய்வாளர்கள் சண்முகவேலன், செந்தில்குமார், ரஜீஸ்பாபு, முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கொல்லப்பட்ட அன்சர் பாஷாவுடன் ஆட்டோவில் பேசிக் கொண்டிருந்த அவரது கள்ளக் காதலி லட்சுமியின் மகன் பெரிய அஜித் (21) என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவர மேலும் விசாரணையில் லட்சுமியுடன் உள்ள தொடர்பை கைவிடுமாறு கொலை செய்யப்பட்ட அன்சர் பாஷாவை லட்சுமி மகன் பெரிய அஜித் பலமுறை எச்சரித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிய 2 வழக்குகள் ஏற்கனவே புழல் காவல் நிலையத்தில் விசாரணையில் நிலுவையில் உள்ளதாக தெரியவந்தது. நேற்று இரவு அஜித் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து அன்சர் பாஷாவை கொலை செய்த வழக்கில் தனிப்படை அஜித் என்ற இளைஞருடன் மேலும் நான்கு இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அன்சர் பாஷாவுக்கு பர்வீன் என்ற மனைவியும், முகமது தயான் 8 வயது என்ற மகனும், முஷரத் 7 வயது மகளும் உள்ளனர். கருத்து வேறு பாட்டால் கடந்த 3 மூன்று வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று புளியந்தோப்பில் வசித்து வருவதாகவும் போலீசார் விசாரணையில் தெரிவிக்கின்றனர்…
நிருபர் வே.சரவணன்