Sun. Oct 6th, 2024

6 லட்சம் மதிப்புள்ள 1500 கிலோ குட்காவுடன் இருவர் கைது | ஒருவர் தலைமறைவு |

6 லட்சம் மதிப்புள்ள 1500 கிலோ குட்காவுடன் இருவர் கைது | ஒருவர் தலைமறைவு |

சென்னை கொடுங்கையூர் மகாகவி பாரதி நகரில் குட்கா மற்றும் மாவா  பொருட்கள் பெட்டிக் கடைகளில் அதிக அளவில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி சந்தேகத்திற்கிடமான இடங்களில் தனிப்படை போலீசார் ஆய்வு செய்த நிலையில் நேற்று காலை 5 மணி அளவில் கொடுங்கையூர் உதவி ஆய்வாளர் மற்றும் நுண்ணறிவு பிரிவு காவலர்கள் கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் லிங்கேசன் தெருவில் ஆய்வு செய்தனர். அப்பொழுது ஒரு வீட்டிலிருந்து பெட்டி பெட்டியாக ஆட்டோவில் சரக்குகள் ஏற்றப்படுவதை பார்த்து அங்கு சென்று அந்தப் பெட்டிகளை பிரித்து பார்த்ததில் அதில் குட்கா இருந்ததால் இது குறித்து அங்கு இருந்த மொத்த குட்காவையும்  பறிமுதல் செய்த போலீசார் செல்வம் (30) மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ராமர் (55) இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த குமாரசாமி (55)என்பவர் கொடுங்கையூரில் வீடு வாடகைக்கு எடுத்து  பெங்களூரில் இருந்து ரயில் மூலம் குட்காவை  கடத்தி அதை பார்சல் செய்து வடசென்னை பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரியர இதனையடுத்து தலைமறைவாக உள்ள குமாரசாமியை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களிடமிருந்து  1500 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்யப்பட்டது இதன் மதிப்பு சுமார் 6 லட்சம் ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது. கைது செய்த செல்வம் மற்றும் ராமர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்…

நிருபர் வே.சரவணன்