Sun. Oct 6th, 2024

மாநில தகவல் ஆணையத்திற்கு புதிய கட்டடம் | 110 விதியின் கீழ் அறிவிப்பு |

மாநில தகவல் ஆணையத்திற்கு புதிய கட்டடம் | 110 விதியின் கீழ் அறிவிப்பு |

ஜூலை, 9, 2019
பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறையின்  மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில்,110 விதியின் கீழ் மாநில தகவல் ஆணையத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும் என சட்டப்பேரவையில்  முதல்வர் அறிவித்துள்ளார்.

மாநில தகவல் ஆணையத்திற்கு சொந்தக் கட்டடம் கட்டப்பட வேண்டிய அவசியத்தைக் கருதி , சைதாப்பேட்டையில் ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டன . மாநில தகவல் ஆணையத்திற்கென , விசாரணை அறைகள் , ஆணையர்களுக்கான அறைகள் , அலுவலக அறைகள் , மனுதாரர்களுக்கான காத்திருக்கும் அறைகள் , நூலகம் , கூட்ட அரங்கு , வாகன நிறுத்துமிடம் , மனுதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்திட தரைத்தளம் மற்றும் 5 தளங்களைக் கொண்ட சொந்தக் கட்டடம் ஒன்று 27 . 79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும் என, முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.

நமதி நிருபர்