Sun. Oct 6th, 2024

வேலூர் மக்களவைத் தொகுதி | அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டி

வேலூர் மக்களவைத் தொகுதி | அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டி

ஜூலை, 6 , 2019

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில்,அதிமுக சார்பில்,ஏ.சி.சண்முகம் போட்டியிட உள்ளதாக,அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அறிவித்துள்ளனர்.

பணப் பட்டுவாடா புகாரின் காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்ட, வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,அதிமுக சார்பில்,  நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி உடன்பாட்டின் படி,புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம்,இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2014 ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில்,ஏ.சி.சண்முகம் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு, 3,24,326 வாக்குகளைப் பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செங்குட்டுவனை விட,59,393 வாக்குகள் குறைவாக பெற்று வெற்றியை நழுவவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நமது நிருபர்