Sun. Oct 6th, 2024

ரவுடியைக் கொலை செய்ய முயன்ற நால்வர் | கைது செய்து போலீசார் விசாரணை |

ரவுடியைக் கொல்ல முயன்ற ரவுடிகள் | போலீசார் கைது செய்து விசாரணை |

ஜூலை,-3,-2019

சென்னையில், பிரபல ரவுடி பல்லுதமனை கொலை செய்ய முயன்ற, ரவுடி வெங்கடேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை, போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடையாறு பகுதியில், வேளச்சேரி போலீசார், நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கே.பி.என் சந்திப்பில், வாகன சோதனை செய்த போது, ஒரு வாகனத்தில் சந்தேகிக்கும் படியாக 4 பேர் இருந்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் அவர்களை விசாரணை செய்ய அழைத்த போது, அதில் இரண்டு பேர் தப்பி ஓடி விட்டனர். இதனையடுத்து, வேளச்சேரி போலிசார், பிடிபட்ட இருவரையும் அடையாறு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் தேனாம்பேட்டையைச் சேர்ந்த ராஜா மற்றும் ஜீவா என்பதும், தப்பித்து ஓடியவர்கள், ரவுடி வெங்கடேஷ் மற்றும் சுரேஷ் என்பதும் தெரியவந்தது.

இந்த ரவுடிக் கும்பல், ஏற்கனவே, தேனாம்பேட்டையில் சிவப்பிரகாஷம் என்ற ரவுடியை,இரண்டு நாட்களுக்கு முன் கொலை செய்ய தாக்கியது தெரிய வந்துள்ளது. அடுத்த படியாக, ரவுடி வெங்கடேஷின் கந்துவட்டி தொழிலுக்கு இடையூறாக இருக்கும், பள்ளிக்கரணையைச் சேர்ந்த, ரவுடி பல்லுதமனை கொலை செய்யவே, ஆயுதங்களை எடுத்துச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பல்லுமதன், ரவுடி பிணுவின் கூட்டாளி ஆவார். உடனடியாக அடையாறு போலீசார் , தேனாம்பேட்டை போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில், தப்பி ஓடிய வெங்கடேஷ் மற்றும் சுரேஷை கைது செய்தனர், கைது செய்யப்பட்ட நான்கு பேரிடமும், தேனாம்பேட்டை போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்…

  • நமது நிருபர்