Sun. Oct 6th, 2024

முதல்வரின் முதல் ஜால்ரா | ஓய்வு பெற்ற அரசு அதிகாரி எழிலழகன் |

ஜூன் 25-2019…,

இவர் கட்சியில் இருக்ககூடிய அரசியல்வாதி அல்ல…!?! ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரி ஆனால் கட்சியில் இருப்பவர் போலவே நடந்து கொண்டு முதல்வரிடம் நல்ல பெயர் எடுப்பதால், சில அமைச்சர்களின் அதிருப்திக்கு ஆளாகி வருகிறார். இவர் செய்தித்துறையில் கூடுதல் இயக்குனராக இருந்து ஓய்வு பெற்று… தற்போது முதல்வரின் செய்திகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து அதீத ஆர்வம் காட்டுவதோடு, முதல்வரிடம் ‘அம்மா மாதிரி ஆட்சி நடத்துகிறீர்கள்; அம்மாவுக்குப் பிறகு நீங்கள் தான் தகுதியான தலைவர்’ என்று முதல்வருக்கு ஜால்ரா அடித்து புகழும் கூட்டத்தில் முதல் இடத்தை பிடித்திருப்பவர் இவர் ஒருவரே அதனால் தான் இவரது ஓய்வு காலத்தை தாண்டியும், பணியில் நீடித்து… பின் அண்மையில் ஓய்வு பெற்றதும் சிறப்பு அதிகாரியாக மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டது.

இவர் பணியில் உள்ள போதும் இவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதும் அதில் கெட்ட பெயர்கள் எடுத்திருந்தாலும். ஜால்ரா அடித்த ஓரே காரணத்திற்காக, முதல்வர் அலுவலகத்தில் மீண்டும் சிறப்பு அதிகாரியாக தற்போது இவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…

மேலும் இவர் முதல்வரிடம் பணிவு காட்டுவது போல ஒரு மாயை உருவாக்கி அதைவைத்து மற்றவர்களிடம் பந்தா காட்டுவதால் அதிமுகவினர் சிலருக்கு இவர் மீதான அதிருப்தி அதிகரித்துள்ளது. ஆளும் கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி நீறுபூத்த நெருப்பாக உள்ள பிரச்னைகள் முற்றி வெடிக்கும் நிலை ஏற்பட்டால் அப்போது இவர் மீதும் நிச்சயம் பல ஊழல் விமர்சனங்கள் உருவாகும் என்று உறுதியாக நாம் எதிர் பார்க்கலாம் என்று அமைச்சர்களின் அறையில் வெளிபடையாகவே பேசி வருகின்றனர்…

நமது நிருபர்