Tue. Oct 8th, 2024

கார் டையர்களை திருடி | கேரளாவிற்கு செல்ல முயன்ற மூவர் கைது |

ஜூன் 21-2019…,

கடந்த 17ஆம் தேதி அன்று தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரவு நேரத்தில்.. ஒரு காரில் வந்த சிலர் அங்கு இருந்த கார் டையரை திருடிக் கொண்டு வேறு காரில் தப்பி செல்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவல்படி… தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க முற்பட்டு… போலீசாரிடம் இருந்து தப்பி செல்கின்றனர்.

விருதுநகர் வந்தடைந்த குற்றவாளிகள் அந்த காரை அங்கேயே விட்டு விட்டு வேறு காரில் தப்பி சென்று விடுகின்றனர். அந்த காரின் உரிமையாளரிடம் விசாரித்த போது… திருடி சென்றவர்களின் விவரங்களை கண்டறிந்து, அவர்கள் பயன்படுத்திய தொலைபேசி எண்களை கண்காணித்து கேரளாவிற்கு தப்பி செல்லவிருக்கும் சமயத்தில் போலீசார் இடுக்கியை சேர்ந்த அஜ்மல்/22, சல்மான்/24 மற்றும் ஃபைசல்/25 ஆகிய மூன்று குற்றவாளிகளையும் கைது செய்தனர்…

நமது நிருபர்