Tue. Oct 8th, 2024

பூட்டை உடைத்து 112 கிராம் தங்கத்தை திருடியவர் | மூன்று மாதங்களுக்கு பிறகு கைது |

ஜூன் 21-2019

கடந்த பிப்ரவரி மாதம் விழுப்புரம் மாவட்டம், திருகோவிலூர் உட்கோட்ட அரங்காந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்… பகல் நேரத்தில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து வீட்டில் திருமணத்திற்காக வைத்திருந்த சுமார் 112 கிராம் எடையுள்ள தங்க நகைகள் மற்றும் ஒரு செல்ஃபோனை யாரோ திருடி சென்று விட்டதாக அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து டி.எஸ்.பி மகேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில்… திருடப்பட்ட செல்ஃபோன் எண்ணின் IMEI எண் வைத்து ஆய்வு செய்ததில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜி.பி.எஸ் சிக்னல் கிடைக்க… போலீசார் அங்கு விரைந்து சென்று திருவண்ணாமலையை சேர்ந்த சதீஷ் என்ற குற்றவாளியை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான 112 கிராம் எடையுள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் குற்றவாளி சதீஷ் மீது சென்னை முகப்பேர் மற்றும் மணல்பேட்டை காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்…

நமது நிருபர்