Tue. Oct 8th, 2024

போரூர் சுங்கச்சாவடி அருகே கண்டெய்னர் | மீது கார் மோதி மூவர் பலி |

ஜூன் 19-2019

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் செல்வகணேஷ். கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது நண்பர்கள் சரண் கிஷோர் (21), பிரவீன் குமார் (21), அஜித் (19) ஆகியோர் மதுரவாயலில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

தனக்கு சொந்தமான காரில் மூன்று நண்பர்களையும் ஏற்றிக்கொண்டு, தாம்பரம் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தார். தாம்பரம் புழல் நெடுஞ்சாலை, போரூர் டோல் கேட் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி திரும்பியபோது பின்னால் செல்வகணேஷ் ஓட்டி வந்த கார் கண்டெய்னர் லாரி மீது மோதியத்து.

இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரை ஓட்டி வந்த செல்வகணேஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்து போனார். மூன்று பேருக்கும் காயம் ஏற்பட்டது இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது சரண் கிஷோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் பிரவீன்குமார், அஜித் ஆகியோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து செய்து விசாரணை செய்து கொண்டு வருகின்றனர்.

நமது நிருபர்