Mon. Oct 7th, 2024

கணவர் சாவில் மர்மம் இருப்பதாக | மனைவி அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் |

ஜூன் 15-2019…,

சென்னை, அமைந்தகரை எம்.எம். காலணியை சேர்ந்த பாண்டுரங்கன்/72. தனது முதுமை காலத்திலும் இவர் அம்மா உணவகத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அமுதா/63 என்பவருடன் கடந்த 9ஆம் தேதியன்று வாய் தகராறு ஏற்பட்டு பாண்டுரங்கன் அமுதாவை திட்டியதாக தெரிகிறது. அதனால் அமுதாவின் மகள் ஆர்த்தி, நாகமணி, பாக்கத்து வீட்டில் குடியிருப்பவர் சோலைமுத்து ஆகியோர் பாண்டுரங்கனை தாக்கியுள்ளனர்.

இதில் பாண்டுரங்கன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பாண்டுரங்கன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி ராஜம்மாள்/65 என்பவர்… இன்று என் கணவர் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து அமைந்தகரை போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

மேலும் பாண்டுரங்கனை தாக்கிய ஆர்த்தி, நாகமணி, சோலைமுத்து ஆகியோரை அமைந்தகரை போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்…

நமது நிருபர்