Sun. Oct 6th, 2024

அதி நவீன கழிப்பிடத்தை பாருங்கள் |

தாம்பரம் பெரு நகராட்சி | அதி நவீன கழிப்பிடம் |

அதி நவீன கழிப்பிடம் ரூ5க்கு டெங்கு காய்ச்சல் + பன்றி காய்ச்சல்..நகராட்சி நிர்வாகத்துறை முற்றிலும் சீரழிந்து போய்விட்டது. நகராட்சிகளின் நகரமைப்பு பிரிவு ஊழலில் மூழ்கி விட்டது. நகராட்சிகளின் சுகாதாரப்பிரிவு மக்களுக்கு டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சலை இலவசமாக கொடுக்கிறது. தாம்பரம் பெரு நகராட்சியின் செயல்படும் அதி நவீன கழிப்பிடத்தை பாருங்கள்.. இந்த நவீன கழிப்பிடத்தில் ரூ5 கொடுத்து விட்டு மூத்திரம் போனால், டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல், மலேரியா காய்ச்சல் இலவசமாக மக்களுக்கு கிடைக்கிறது.தாம்பரம் பெரு நகராட்சியின் சுகாதாரபிரிவு ஆய்வாளர் ஆல்பர்ட் அருள் ராஜ் மக்களைப்பற்றி கவலைப்படாமல், கோடீஸ்வரர் பட்டியலில் இடம் பெறுவது எப்படி என்று ஆலோசனை செய்து வருகிறார்…

நன்றி
மக்கள் செய்தி மையம்