Mon. Jul 8th, 2024

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் | மீண்டும் வடகலை தென்கலை கைக்கலப்பு |

மே, 25-2019…,

பிரம்மோற்சவத்தில் 8ம்- நாள் திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாடுவதில் தாராறு.

வட கலைப்பிரிவு ஐயங்கார்களுக்கும், தென்கலை பிரிவு ஐயங்கார்களுக்கும் இடையே தகராறு. பொதுமக்கள் மத்தியில் கைக்கலப்பு. பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 7 தினங்களாக வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு வரதராஜ பெருமாள் அன்ன வாகனம் சிம்ம வாகனம் யானை வாகனம் கருட வாகனம் திருத்தேர் என பல்வேறு வாகனங்களில் காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வருவார். வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளில் வலம் வரும் பொழுது சுவாமிக்கு முன்னும் பின்னும் வடகலை, தென்கலை, பிரிவு ஐயங்கார்கள் வேத மந்திரங்களையும் பாசுரங்களையும் பாடிக் கொண்டு செல்வார்கள்.

இந்நிலையில் எட்டாம் நாள் உற்சவமான இன்று குதிரை வாகனத்தில் வரதராஜ பெருமாள் திருவீதி உலா வரும் பொழுது திருக்கச்சிநம்பி தெரு பகுதியில் வேடுபறி உற்சவம் நடக்கும் அவ்வாறு நடக்கும் பொழுது தென் கலை பிரிவினர் திருமங்கை ஆழ்வார் பாசுரம் பாட முற்பட்டுள்ளனர் அப்பொழுது கோவில் அர்ச்சகர்களும், வடகலை பிரிவினரும், திருமங்கை ஆழ்வார் பாசுரத்தை பாடவிடாமல் தென்கலை பிரிவினரை தடுத்துள்ளனர். இதனால் இரு பிரிவினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் அது பொதுமக்கள் மத்தியில் கைகலப்பாக மாறியது. குதிரை வாகன உற்சவத்தின் போது ஐயங்கார்களின் இரு பிரிவினரும், சுவாமி தரிசனம் செய்ய கூடிய பொதுமக்கள் முன்னிலையிலேயே கைகலப்பில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடகலை,தென்கலை பிரிவினர் சாலையிலேயே நடத்திய இச்செயல் சாமி தரிசனம் செய்ய வந்த பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது. மேலும் ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின் போது ஏதாவது ஒரு திருவிழாவின் போது இரு பிரிவினரும் மோதிக் கொள்வது வாடிக்கையாகி வருவது காஞ்சிபுரம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகலை, தென்கலை பிரிவினரின் இச்செயலை கோவில் நிர்வாகமும், காவல்துறையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏனோ என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்…

நமது நிருபர்