Mon. Oct 7th, 2024

ஆட்டோ டிரைவரை சரமாரியாக வெட்டிய வாலிபர் கைது |

மே, 24-2019..,

கடந்த 21ஆம் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில்… அமைந்தகரை பகுதியில் உள்ள ஆட்டோ ஒட்டுனர் சுந்தர்(40)… வீட்டில் தனியாக இருந்த நிலையில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்… சுந்தரின் தலை, நெற்றி, கை, கால் என சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். வலியால் துடித்த சுந்தரை அருகே உள்ளவர்கள் 108 அவசர வாகனத்தை வரவைத்து ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனைக்கு சென்ற சுந்தருக்கு தலையில் 15 தையல் போட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அமைந்தகரை போலீசார்.. சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து விசாரணை செய்து வந்ததில்… முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுனர் சுந்தர் என்பவரை வெட்டியது, அண்ணா நகரை சேர்ந்த ராஜசேகர்(19) என தெரிவந்தது.

ராஜசேகரை கைது செய்து எதற்காக ஆட்டோ ஓட்டுனர் சுந்தரை வெட்டினர் என அமைந்தகரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்…

நமது நிருபர்