Mon. Jul 8th, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 2.15 லட்சம் வீடுகளில் 64098 வீடுகளுக்கு ரூபாய் 32 கோடி நிவாரண தொகை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி…

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் என்ற கதையில்

மீட்புப்பணிகள் முன்னேற்றம் குறித்த அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியபோது புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 2.16 லட்சம் வீடுகளில் 640 98 வீடுகளுக்கு ரூபாய் 32 கோடி நிவாரணத் தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும் மீதமுள்ளவர்களுக்கு நிவாரணத்தை வழங்கும் பணி நடந்து வருகிறது என்றும் உயிரில் விழுந்த மரங்களுக்கு இணையாக இரண்டு மடங்கு மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளதாக அதன் பணிகள் தொடங்கப்பட்டது தெரிவித்தார் மேலும் தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தமிழக அரசின் 27 வகையான நிவாரணப் பொருட்கள் மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார் இதன் பின்னர் எடப்பாடியில் இருந்து இரண்டு லாரிகளில் நிவாரணப் பொருட்கள் வந்ததை அமைச்சர் பார்வையிட்டு வாங்குவதற்காக கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது…

AK@