கோயம்பேடு | பெண் காவலர் குடும்பத்தினரிடம் 10 சவரன் நகை கொள்ளை..! |
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண் காவலர் குடும்பத்தினரிடம்
10 சவரன் நகை கொள்ளை..
சென்னை, அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் அருணா. இவர் டிபி.சத்திரம் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மாமனார் சுந்தரம், மாமியார் சரோஜா ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இருந்து தன்னுடைய மருமகளை பார்ப்பதற்காக சென்னை வந்துள்ளார். பின்னர் மருமகள் அருணாவை பார்த்து விட்டு இன்று காலை போளூர் செல்ல.. இருவரும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்தில் அமர்ந்து இருக்கும் போது… நீண்ட நேரமாக பேருந்து எடுக்காததால் சுந்தரம் ஓட்டுனரிடம் முறையிட்டுள்ளார். பின்னர் இருக்கைக்கு வந்து பார்த்தபோது தனது பை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கொள்ளை அடித்த பையில் 10 சவரன் நகை மற்றும் அடையாள அட்டைகள் இருந்துள்ளதாகவும் சுந்தரம் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், வழக்கு பதிவு செய்த கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
நமது நிருபர்