Mon. Oct 7th, 2024

இரண்டாவது மனைவியை கொன்று விட்டு | நாடகமாடிய கணவர் கைது |

சென்னை தீவுத்திடல் எதிரில் அமைந்துள்ள அன்னை சத்தியா நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை (எ) குட்டி. இவர் தனது மனைவியுடன் பிரிந்து வாழந்து வரும் நிலையில், அதேப்பகுதியை சேர்ந்த பாலா என்னும் பெண்ணிடம் பழக்கம் ஏற்பட்டு.. நாளடைவில் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

பாலாவும் வேறு ஒருவருடன் ஏற்கனவே திருமணம் முடிந்து… கணவரிடமிருந்து பிரிந்து வாழ்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது குட்டிக்கும் பாலாக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் குட்டி விட்டில் இருந்து வெளியேறியுள்ளார். பின்னர் அங்கு திரும்பி வீட்டிற்கு வந்த குட்டி பாலா மூச்சு திணாரி இருந்து விட்டதாக அருகே உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் இது குறித்து தகவலறிந்த கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் பிரேத பரிசோதனையில் பாலா மூச்சு திணாரி இறக்கவில்லை என்றும் மாறாக கை, கால் மற்றும் மார்பாக பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதுமட்டுமின்றி தலையணையால் அளுத்தி கொலை செய்ததற்கான தடையங்கள் உள்ளதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து பாலாவின் கணவர் குட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குட்டிக்கும் பாலாவுக்கும் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் குட்டி ஆத்திரத்தில் தான் வைத்திருந்த கத்தியால் பாலாவின் கைகளில் மற்றும் கால்களில் வெட்டி.. பின்னர் அருகில் இருந்த கல்லை எடுத்து பாலாவின் மார்பாக பகுதியில் பலமாக தாக்கியுள்ளார். பிறகும் பாலா உயிருடன் இருக்க வீட்டில் இருந்த தலையணை எடுத்து பாலாவின் முகத்தில் வைத்து அழுத்த… பாலாவிற்கு மூச்சு திணாரி ஏற்பட்டு பரிதபமாக உயிரிழந்துள்ளார்.

பின்னர், இதனை மறைக்கவே பாலா மூச்சு திணரி இறந்ததாக தெரிவித்ததாகவும், குட்டி போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து குட்டியை கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கோட்டை காவல் நிலையத்தில் குட்டின் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது என குறிப்பிடத்தக்கது…

நமது நிருபர்