Mon. Jul 8th, 2024

கூகுள் கொள்ளையர்களிடம் சென்னையில் காவல்துறை விசாரணை…

சென்னையில் கூகுள் உதவியுடன் பணக்கார ஏரியாவை கூகுள் மேப் போட்டு இடத்தை கண்டுபிடித்து கொள்ளையடிப்பவர்கள்
சத்திய ரெட்டி, நாராயண குரு.
என்ற இரண்டு கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,
பின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் கொள்ளையர்களிடம் விசாரணை நடைபெறுகிறது
தமிழகத்தில்
இதுவரை 120-பவுன் நகை அவர்களிடம் இருந்து மீட்பு மேலும் விசாகப்பட்டிணம் போலிசார் கடந்த டிசம்பர் 1ம் தேதி கைது செய்தனர் இதனை தொடர்ந்து இன்று
தெலங்கானா சிறையில் இருந்த கொள்ளையர்கள் இருவரையும் டிரான்சிட் வாரண்ட் பெற்று சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது சென்னை எழும்பூர் அல்லிகுளம் நீதிமன்றத்தில் உள்ள 13 வது நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர்…