Mon. Oct 7th, 2024

கல்லூரி மாணவியை செல்போனில் படம் பிடித்து மிரட்டியவர்கள் | போக்சோ சட்டத்தில் கைது |

கல்லூரி மாணவியை செல்போனில் படம் பிடித்து மிரட்டியவர்கள் | போக்சோ சட்டத்தில் கைது |

பள்ளிக்கரணை நாராயணபுரம், குளக்கரை 2வது தெருவை சேர்ந்தவன் ஸ்ரீநாத் (20). தனியார் பொறியியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு மாணவன். ஸ்ரீநாத் பள்ளி பருவம் முதல் தன்னுடன் ஒன்றாக படித்து வந்த மடிப்பாக்கத்தை சேர்ந்த மற்றொரு கல்லூரியில் படிக்கும் மாணவியை கடந்த 2 ஆண்டுகளாக மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமண ஆசை காட்டி மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதனை தனது சக கல்லுாரி நண்பனான வேளச்சேரி காந்தி சாலை கிழக்கு மாடவீதியை சேர்ந்த யோகேஷ் (19) என்பவர் மூலம் ரகசியமா செல்ஃபோனில் படம் எடுத்துள்ளார். மேலும் அந்த படத்தை காட்டி சமூக வலைத்தளத்தில் பரப்பி விடுவதாக மாணவியிடம் கூறி தாங்கள் அழைக்கும் போதெல்லாம் வரும்படி மிரட்டியுள்ளனர்.

மேலும் பணம் கேட்டு அச்சுறுத்தியும் வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் மாணவியை செல்ஃபோனில் படம் எடுத்து மிரட்டியது உண்மை என தெரியவந்ததை அடுத்து மாணவியின் காதலன் ஸ்ரீநாத், செல்போனில் படம்பிடித்த யோகேஷ் ஆகிய 2 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்…

நமது நிருபர்