Mon. Oct 7th, 2024

கவனத்தை திசை திருப்பி 6 லட்சம் | திருடிய இருவர் கைது |

கவனத்தை திசை திருப்பி 6 லட்சம் | திருடிய இருவர் கைது |

வீடு வரை பின் தொடர்ந்து வந்து 6 லட்சம் ரூபாய் அபேஸ்! புதுச்சேரியில் நூதன கொள்ளை

புதுச்சேரி அருகே மேட்டுபாளையம் காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் சாந்திமதி என்பவர் தனது குடும்ப உறுப்பினரின் மருத்துவ செலவிற்காக மார்ச் மாதம் 16 ஆம் தேதியன்று வங்கியிலிருந்து 6 லட்சம் ரூபாயை வீட்டிற்கு எடுத்து
வந்து வைத்துள்ளார். வங்கியிலிருந்து யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் பின் தொடர்ந்து வீடுவரை வந்ததும் அறிந்த சாந்திமதி யார் நீங்க என்ன வேண்டும் என்ன கேட்க சாந்திமதியை பின் தொடர்ந்து வந்த நபர்கள் அவரிடம் சகஜமாக பேசுவதுபோல் அவர் வீட்டில் வைத்திருந்த 6 லட்சம் ரூபாயை எடுத்து சென்றுவிட்டனர்.பிறகு சாந்திமதி காவல் நிலையத்தில் புகார் அளித்தபின் வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தியதில்
மேட்டுபாளையத்தில் திருடர்கள் குறித்து தகவல் அறிந்ததும் இருவரில் ஒருவரை பிடித்து விசாரித்ததில் திருச்சியை சேர்ந்த மூர்த்தி/40 மற்றும் அருண்(எ) அருண்பாண்டியுடன் சேர்ந்து கடந்த 16 ஆம் தேதி கவனத்தை திசை திருப்பி சாந்திமதி என்பவரிடம் இருந்த
ரூ.6 லட்சத்தை திருடியதாக ஒப்புகொண்டார்..

இவர்கள் மீது ஏற்கனவே திருச்சி சமயபுரம் வேலாங்கன்னி போன்ற காவல் நிலையங்களில் கவனத்தை திசை திருப்பி திருடும் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது இவர்களிடம் இருந்து ரூபாய் 1,லட்சத்தி 40 ஆயிரம் பறிமுதல் செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்..

நிருபர் ராம்