பெரியார் சிலை உடைப்புக்கு | வெல்ஃபேர் கட்சி கடும் கண்டனம் |
நேற்றைய தினம் அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
இதற்கு வெல்ஃபேர் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது மூடநம்பிக்கை ஒழிப்பும் சமநீதியும் வலியுறுத்தி போராடிய பெரியார் மனுவாதிகளுக்கு இன்னமும் பயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் இதன் வெளிப்பாடு. தமிழக மண்ணில் மனு வாதம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. இது தமிழக மக்களுக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை.
இங்கே பாசிச பாஜக காலூன்றுமானால் பெரியாரிய போராட்டத்தின் விளைவாக கிடைக்கப்பெற்ற சமநீதி சமாதியாகும். எக்காரணத்தைக் கொண்டும் தமிழக மண்ணில் காவிகளுக்கு இடமில்லை என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கின்றோம்.
அனைத்து பெரியாரிய உணர்வாளர்களும் இந்த காவி பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக ஒருங்கிணைய வேண்டும். இந்த நாட்டிலேயே காவிகளை ஆரிய, மனுவாதக் கருத்துக்களை அடித்து நொறுக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு பெரியாரின் கருத்தியல் தடிதான் நமக்கு முக்கிய ஆயுதம் என்பதை கருத்தில் கொண்டு அதை நோக்கிய வளமான பயணத்தை மேற்கொள்வதற்கு தமிழக சீர்திருத்த போராளிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று வெல்ஃபேர்கட்சி தமிழக நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன். பெரியார் சிலை உடைப்புக்கு காரணமானவர்களை தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெல்ஃபேர் கட்சி தமிழக நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
கே.எஸ்.அப்துல் ரஹ்மான், மாநிலப் பொதுச்செயலாளர்