இருசக்கர வாகனங்கள் உட்பட | வீட்டின் உடைத்து திருடியவர் கைது |
தொடர்ந்து இரு சக்கரவாகன திருட்டில் ஈடுப்பட்ட நபர் கைது.
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் சந்தேகப்படும் படி இரு சக்கரவாகனத்தில் சுற்றித் திரிந்த நபரை வாகன சோதனையில் ஈடுப்பட்ட வில்லிவாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் அவர்கள் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவன் வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியை சேர்ந்த இளங்கோ வயது 34 என்பதும், சிட்கோ 45 வது தெருவில் ஸ்பெலன்டர் வண்டியை திருடி வந்ததும் தெரியவந்தது.
மேலும் இவர் மீது சென்னை வடபழனி, வளசரவாக்கம், அண்ணாநகர் காவல்நிலையங்களில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டு வந்ததும் மற்றும் வீடுகளின் பூட்டை உடைத்து திருடி வந்ததும் தெரிய வந்தது.
அவரை கைது செய்த வில்லிவாக்கம் போலிசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
நமது நிருபர்