Sun. Oct 6th, 2024

பழிக்குப்பழி ரவுடி வெட்டிக்கொலை | 4 பேர் கைது | 3 பேர் தலைமறைவு |

சென்னை அரும்பாக்கத்தில் பழிக்குப்பழியாக ரவுடி வெட்டி கொலை 4 பேர் கைது. 2 கத்தி , மற்றும் இரு சக்கர வாகனம் பறிமுதல். 3 பேர் தலைமறைவு.

சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் ரவுடி கிச்சா (எ) கிருஷ்ணமூர்த்தி (39). இவர் திருவெற்றியூர் உள்ள எர்ணாவூரில் தன் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

இவர் கடந்த 20 வருடங்களாக சென்னை அரும்பாக்கத்தில் வசித்து வந்தவர்.

நேற்று காலை 10:30 மணி அளவில் சென்னை அரும்பாக்கம் பெருமாள் கோவில் வாசலிலேயே ரவுடி கிருஷ்ணமூர்த்தியை 6 பேர் கொண்ட கும்பல் வழி மடக்கி சரமாரியாக வெட்டியது.

தலை , கால் .கை , போன்ற பகுதியில் சரமாரியாக வெட்டியதில் ரவுடி கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்கு பதிவு செய்து அண்ணாநகர் உதவி கமிஷ்னர் குணசேகர் தலைமையில் ஆய்வாளர் முத்துகுமார் , சங்கர் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் நேற்று நள்ளிரவு எழும்பூர் பகுதியில் வழக்கறிஞரை பார்க்கச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்க… சம்பவ இடத்துக்கு சென்ற ஆய்வாளர் முத்துக்குமார் ஆய்வாளர் சங்கர் தனிபடைக்குழு குற்றவாளிகளை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்.

கைது செய்த நாலு பேரிடம் விசாரணை செய்ததில் அரும்பாக்கம் சேர்ந்த சங்கர் வயது 29, அரும்பாக்கம் சேர்ந்த அஜித் வயது 24, கோயம்பேடு சேர்ந்த பாபு பைக் 24, கோயம்பேடு சேர்ந்த கவிராஜ் வயது 24.

இதில் சங்கர் சித்தப்பா ரவுடி நாகராஜ் வயது 47 இவரை 2011ல் ரவுடி கிருஷ்ணமூர்த்தி கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக பழிக்கு பழி வாங்குவதற்கு சங்கர் நண்பர்களுடன் சேர்ந்து ரவுடி கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்ய திட்டமிட்டார்.

நேற்று (27 மார்ச்) அரும்பாக்கம் வழியாக செல்வதாக தகவல் கிடைத்தது உடனே சங்கர் மற்றும் நண்பர்கள் 6 பேர் கொண்ட கும்பல் ரவுடி பிச்சமூர்த்தியை வழிமறித்து சரமாரியாக வெட்டினார்கள்.

கைது செய்த நாலு பேரிடம் இருந்து கத்தி ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய மூன்று பேர் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கிருஷ்ணமூர்த்தி சென்னை அரும்பாக்கத்தில் தங்கி லோடுவேன் ஓட்டி வந்தார்.
இந்நிலையில் இன்று காலை முகத்தில் துணி கட்டிக்கொண்டு வந்த 6 பேர் , கிருஷ்ணமூர்த்தியை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் பெருபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதற்கட்ட விசாரணையில் பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது . கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் ரவுடி கிருஷ்ணமூர்த்தி மீது கொலை முயற்சி மற்றும் 8 அடிதடி வழக்குகள் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…

நமது நிருபர்