Sun. Oct 6th, 2024

மகளிர் சுய உதவிக் குழு தலைவி | வங்கியில் ஐந்து லட்சம் கையாடல் |

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஐந்து லட்சம் ரூபாய் மகளிர் சுய உதவிக்குழு கடனை குழுவின் உறுப்பினர்களுக்கு தெரியாமல் வங்கியாளர் உதவியுடன் மகளிர் சுய உதவிக் குழு தலைவி பணத்தை பெற்று கொண்டு கடந்த இரண்டு மாதங்களாக வெளியில் தெரியாமல் மறைத்துள்ளது அப்பகுதியில் உள்ள பெண்களிடம் சர்சையை ஏற்படுத்தியுள்ளது…

பெருந்துறை ஒன்றியம் பாண்டியம்பாளையம் ஊராட்சியில் புது குமாரபாளையம் பகுதியில் சக்தி விநாயகர் மகளிர் குழு கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது இந்த குழுவிற்கு தலைவியாக புது குமாரபாளையத்தை சேர்ந்த சசிகலா என்பவர் தலைவியாக உள்ளார் இவர் மகளிர் குழுவில் உள்ள மற்ற
14,பெண்களிடம் கடந்த மூன்று மாதம் முன்பு குழுவை புதுப்பிக்க வேண்டும் எனவும் அதற்காக மகளிர் குழுவின் திட்டத்தில் கொடுக்க புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை ஒரிஜினல் வேண்டும் எனவும் சில படிவங்களில் கையெழுத்தும் பெற்றுள்ளார்..

பின்னர் அதனை வங்கியில் கொடுத்து ஐந்து லட்சம் கடன் பெற்றுள்ளார் இந்த விபரம் மற்ற குழு பெண்களுக்கு தெரியாமல் மறைத்தும் விட்டார் தற்போது மற்ற குழு உறுப்பினர்களுக்கு இந்த கடன் மோசடி தெரியவந்ததும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்துள்ளார் இது குறித்து வங்கியில் விசாரித்த போது..

மகளிர் குழு தலைவி சசிகலா கடந்த வருடம் மகளிர் குழு பெயரில் ஐந்து லட்சம் பனம் பெற்று அனைவருக்கும் பிரித்து கொடுத்து உள்ளார் மற்ற பெண்கள் 14 பேரும் மாதா மாதம் வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகையை சசிகலாவிடம் கொடுத்துள்ளனர். ஆனால் சசிகலா பணத்தை முறையாக வங்கியில் செலுத்தவில்லை. இதனால் ஒரு வருடம் ஆகியும் கடன் தொகை முழுமையாக வசூல் ஆகாததால் வங்கி செயலாளர் மற்றும் பணியாளர்கள் சசிகலாவை அழைத்து இந்த மோசடி ஆலோசனை கூறியுள்ளனர் மகளிர் குழு பெயரில் புது கடன் வழங்கி ஏற்கனவே சசிகலா கட்டவேண்டிய பணத்தை வரவு வைத்து விட்டனர்.

மேலும் வங்கியாளர்களும் கடன் கொடுத்த விசயத்தை மறைத்து விட்டனர் முறையாக பணம் செலுத்து மகளிர் குழுக்களுக்கு மட்டுமே திரும்ப கடன் வழங்க வேண்டும் என்ற விதியிருந்தும் பணமே செலுத்தாமல் மோசடி செய்த மகளிர் குழு தலைவிக்கு எப்படி கடன் வழங்கமுடியும் என மகளிர் குழு உறுப்பினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நல்லாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கோபால்சாமியிடம் இது குறித்து கேட்டபோது
வங்கிக்கு தேவையான ஆவனங்களை சசிகலா கொடுத்ததால் கடன் கொடுத்தோம் மற்ற குழு பெண்களின் கையெழுத்து இருந்ததால் தான் கடன் வழங்கப்பட்டது இதில் விதிமுறை மீறல் இல்லை என கூறினார்…

நமது நிருபர்