Sun. Oct 6th, 2024

தினகரன் அணிக்கு நிச்சயம் போகமாட்டேன் | முன்னாள் எம்பி |

தினகரன் அணிக்கு போக மாட்டேன் நிச்சயம் முன்னாள் எம்பி |

அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலுக்கு தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் முன்னாள் அமைச்சரும் திருப்பூர் மாவட்ட கழக செயலாளர் எம்எஸ்எம் ஆனந்தனை அதிமுக தலைமை திருப்பூர் பாராளுமன்ற வேட்பாளராக அறிவித்துள்ளதால்…

திருப்பூரில் திருமதி சத்தியபாமா அவர்கள் தனக்கு சீட் கிடைக்காத விரக்தியில் தினகரன் அணிக்கு போவதாக நேற்று முதல் சமூக வலை தளங்களில் ஒரு செய்திகள் பரவியது இது பற்றி அவரிடம் தொடர்புக் கொண்டு கேட்டபோது அதற்கு பதிலளித்த அவர் எனக்கே தெரியாமல் என்னை பற்றி இப்படி ஒரு செய்தியை வெளியிட்டிருப்பது அதர்ச்சியை ஏற்படுத்துகிறது நான் அம்மாவின் ஆன்மாவிற்கு என்றும் துரோகம் செய்ய மாட்டேன் அப்படி
வேறு அணிக்கு‌ மாறும் எண்ணம் எனக்கு இல்லை இதுபோல வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்றும் மேலும் எனது தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவர்களுடன் இணைந்து தேர்தல் பணியாற்றுவேன் என்றார் பாராளுமன்றத்தில் எனது செயல்பாடுகள் பற்றியும் எனது தொகுதிக்கு நான் கொண்டு வந்த நல்ல திட்டங்கள் பற்றியும் தொகுதி மக்களுக்கு நன்கு தெரிந்து இருக்கும் மேலும் வருங்காலங்களில் கட்சிக்கு பணியாற்றுவது தான் எனது பணி என்று கூறினார்..

நிருபர் சண்முகசுந்தரம்