Sun. Oct 6th, 2024

பெண்ணுடன் அரை நிர்வாணமாக மிரட்டி புகைப்படம் எடுத்து |தொழிலதிபரிடம் பணம் பறிப்பு |

வாணியம்பாடியில் பெண் ஒருவர் அடி ஆட்களை வைத்து தொழில் அதிபரிடம் ரூ.3 லட்சத்து 4 ஆயிரம் பறிப்பு. பெண் உட்பட இருவர் கைது செய்து விசாரணை.

மார்ச் 17, வேலூர் மாவட்டம் ஆம்பூர் கே.எம் நகர், நூருல்லாபேட்டை பகுதில் வசித்து வருபவர் அப்துல் ரப் ஆரிஃப். இவர் காலனி ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக இவரது தாயார் உடல் நலம் குறைவால் படுக்கையில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது தாயாரை கவனித்து கொல்ல செவிலியர் வேண்டும் என்று பலரிடம் கூறி வந்தார். இதன் அடிப்படையில் வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த ஆபிதா என்ற பெண் கடந்த ஐந்து நாட்களாக இவரை செல் போனில் தொடர்பு கொண்டு செவிலியர் ஒருவர் இருப்பதாகவும், நேரில் வந்து அழைத்து செல்லுமாறு பேசி உள்ளார்.

இந்நிலையில் இவர் நேற்று பெங்களூருக்கு சென்று மாலை டபுள் டக்கர் ரயிலில் ஆம்பூர் நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது அந்த பெண் மீண்டும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு செவிலியரை அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார். இதனை கேட்டு அவர் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இறங்கி அந்த பெண்ணை தொடர்பு கொண்டு ஆட்டோ மூலம் அவர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது அந்த பெண் அவரை வீட்டிற்குள் அழைத்து சென்று ஒரு அறையில் அமர வைத்துள்ளார். சிறிது நேரத்தில் திடீர்ரென ஐந்துக்கும் மேற்பட்டோர் அறையில் நுழைந்து கத்தி மற்றும் ஆயதங்களை காண்பித்து அவருடைய ஆடைகளை கழற்றி அரை நிர்வாணமாக்கி பக்கத்தில் ஒரு பெண்ணை நிறுத்தி செல் போனில் படம் பிடித்துள்ளனர். மேலும் எடுக்கப்பட்டுள்ள படத்தை காண்பித்து பணம் கேட்டு மிரட்டியும், பணம் கொடுக்காவிட்டால் சமுக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளனர். அப்போது அவர் உயிர்க்கு பயந்து தன்னிடம் இருந்த ரூ. 4 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். மேலும் அவர் வைத்திருந்த 5 வங்கிகளின் ஏ.டி.எம் கார்டுகளை பறித்து அதன் ரகசிய என்னை மிரட்டி வங்கிய பின்னர் அவரை அறையில் பூட்டி சென்றனர்.
இதனை தொடர்ந்து ஏ.டி.எம் கார்டுகளை எடுத்து சென்ற கும்பல் வாணியம்பாடி சி.எல் சாலையில் உள்ள ஒரு நகை கடையில் ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தி ரூ.2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை வங்கியுள்ளனர். மேலும் பல்வேறு வங்கி ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தி ரூபாய் ஒரு லட்சத்தை எடுத்துள்ளனர்.

அறையில் பூட்டி இருந்த தொழில் அதிபரை இரவு 10 மணிக்கு கும்பலின் ஒருவர் ஆட்டோ மூலம் பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்த்துள்ளார். அப்போது காதர்பேட்டை என்ற இடத்தில் ஆட்டோ வந்த பொழுது தொழிலதிபர் கூச்சலிட்டுள்ளார். இதனை கேட்ட பகுதி மக்கள் ஆட்டோவை நிறுத்திய பின்னர் அதில் இருந்த நபர் ஓட முயன்ற போது பொதுமக்கள் அவரை பிடித்தனர். விசாரித்த போது தொழில் அதிபர் தன்னை கடத்தி பணம் பறித்ததாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பிடிப்பட்ட நபரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து தொழில் அதிபர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் முரளி தலைமையிலான போலீசார் பெண் உட்பட இருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவான நபர்களை தேடி வருகின்றனர்.

தொழில் அதிபரை வரவழைத்து பணம் பறித்த சம்பவம் வாணியம்பாடி பகுதி மக்களிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.