Sun. Oct 6th, 2024

எட்டாம் வகுப்பு மாணவி மாயம் | வட மாநிலத்தவர் கடத்தியதாக தந்தை புகார் |

8 ஆம் வகுப்பு மாணவி மாயம்… வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் கடத்தி சென்று விட்டதாக தந்தை அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார்.

சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் கவியரசன் வயது 40. ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இவரது மகள் (13) அமைந்தகரையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார் இன்று மதியம் 12 மணி அளவில் பள்ளியின் அருகே தனது தாயாரிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை எனக்கூறப்படுகிறது.

இது தொடர்பாக கவியரசன் இன்று மதியம் 2 மணி அளவில் அமைந்தகரை காவல் நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்த ஜாகீர் என்ற நபர் தனது மகளை கடத்தி சென்று இருக்கலாம் என புகார் அளித்துள்ளார் அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அமைந்தகரை போலீசார், மதியம் இரண்டு நபர்கள் பள்ளி சீருடையில் மாணவியை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றதாக கூறியுள்ளனர்.

ஜாகீர் வயது 30 என்ற நபர், கேபிள் ஆப்ரேட்டராக பணிப்புரிந்து வருவதாகவும், தற்பொழுது பெங்களூரில் இருப்பதாக வந்த தகவலை அடுத்து ஆய்வாளர் பெருந்துரைமுருகன் தலைமையில் தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்துள்ளனர்.

மேலும் பொள்ளாச்சி சம்பவம் நடந்து பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் 13 வயது சிறுமி வட மாநில இளைஞர்கள் இருவர் அழைத்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது…

நமது நிருபர்