Sun. Oct 6th, 2024

சிலை கடத்தல் முறைகேடு வழக்கில் | முன்னாள் ஆணையர் கைது |

கோயில் சிலை முறைகேட்டில் | முன்னாள் ஆணையர் கைது |

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சிலை முறைகேடு வழக்கில் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கைது..

சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் 8.7 கிலோ தங்கம் முறைகேடு செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது ஏற்கனவே இந்த கோயில் சிலைகள் கடத்தல் சம்மந்தமாக ‘மக்கள் செய்தி மையம்’ வீரசண்முகமணியை ஏன் கைது செய்யவில்லை என்றும் முத்தையா ஸ்தபதியின் கடிதம் எங்கே.? என்ற செய்தியில் வீரசண்முகமணியை விசாரித்தால் பல உண்மைகள் வெளிவரும் எனவும் விளக்கமாக “மக்கள் செய்தி மையம்” செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

வழக்கில் முன்னாள் ஸ்தபதி முத்தையா உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு என அண்ணாமலை என்பவர் புகார் அளித்தார்.

முன்னதாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமாஸ்கந்தர் சிலை முறைகேடு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டார். சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு மூலம் 8.7 கிலோ தங்கம் அபகரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. சிலை செய்ததில் முறைகேடு நடந்திருப்பதை இந்திய தொழில் நுட்பக் கழக வல்லுநர் குழு உறுதி செய்தது. இதனை அடுத்து தலைமை ஸ்தபதி முத்தையா உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சோமாஸ்கந்தர் சிலை விவகாரத்தில் இந்துசமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டது என வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது…

இந்நிலையில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் சிலை முறைகேடு வழக்கில் தற்போது மேலும் இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி கைது செய்யப்பட்டுள்ளார்…

நமது நிருபர்