Sun. Oct 6th, 2024

கூலிப்படையை வைத்து| மனைவியை தீர்த்து கட்டிய கணவர்|

கூலிப்படையை வைத்து|மனைவியை தீர்த்து கட்டிய கணவர்|

புதுச்சேரி மதுக்கரை அருகே நேற்று முன்தினம் கங்கா/27 என்ற பெண்ணை அதிகாலையில் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் கத்தியால் கங்காவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டனர்…

உடனே தகவல் அறிந்த கங்காவின் தாய் பத்மாவதி நெட்டபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் விசாரணை தொடங்கிய காவல்துறையினர் கங்காவின் கணவன் ராஜீ (எ) ராஜசேகரன்/29 மற்றும் கூட்டாளிகளான சுகுமாரன்/34 அருள் பிரகாஷ்/26, பிரபகாரன் /27 குணசீலன்/24 ஜெகன்/27 தசரதன்/27 ஐயப்பன்/27 மற்றும் ரஞ்சித்/26 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்..

இதில் முக்கிய குற்றவாளிகளான சுகமார் மற்றும் அருள் பிரகாஷ் என்பவர்கள் பல கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் எனவும் மேலும் கதிர் எனப்படும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் மட்டும் தலைமறைவாகி யுள்ளார்…

மனைவியுடன் அடிக்கடி தகறாரில் ஆத்திரமடைந்த ராஜசேகரன் மனைவியை கொலை செய்ய திட்டமிட்டு கூலிபடையை ஏற்பாடு செய்து நேற்று முன்தினம் தனது மனைவி கங்காவை தீர்த்து கட்டியுள்ளார்.

இரண்டே நாளில் கூலிப்படையினருடன் காவல்துறையிடம் வசமாகி சிக்கி கொண்டார் ராஜசேகரன்…

குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் தலைமறைவாக உள்ள கதிர் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்… நிருபர் வெ.ராம்