Sun. Oct 6th, 2024

அமைச்சர் நிகழ்ச்சியில்| அரசு பள்ளி மாணவர்கள் வெளியே,தனியார் பள்ளி மாணவர்கள் உள்ளே |

அரசு பள்ளி மாணவர்கள் வெளியே
தனியார் பள்ளி மாணவர்கள் உள்ளே!

நேற்று புதுக்கோட்டையில் அரசு மருத்துவமனை கல்லூரியில் மருத்துவக் கண்காட்சி என்ற பெயரில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அரசு மாணவர்களை மட்டும் கண்காட்சி அரங்கத்திற்க்கு வெளியே சுட்டெறிக்கும் வெயிலில் அமரவைத்துவிட்டு தனியார் பள்ளி மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் மட்டும் அரங்கத்தினுள் அமர் வைத்து விட்டு மருத்துவ கண்காட்சி என்ற பெயரில் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளனர்.

தமிழக அரசின் அமைச்சராக உள்ள விஜயபாஸ்கர் மற்றும் புதுக்கோட்டை ஆட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் ஏ.எல் மீனாட்சி சுந்தரம் ஆகிய இவர்கள் அரசு பள்ளி மாணவர்களை மட்டும் ஒரு தலைபட்சமாக நேற்று நடத்தியது ஏன்?!