Mon. Oct 7th, 2024

ஐ.ஏ.எஸ் அதிகாரி மனைவியின் செல்போனை பறித்தவர் கைது..!

சென்னை கீழ்பாக்கத்தில் வசித்து வருபவர் ஐஏஎஸ் அதிகாரி குமரகுரு. இவரது மனைவி அனுராதா. கடந்த 9 ம் தேதி இவர் வீட்டில் வாசலில் நின்று போன் பேசி கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் பைக்கில் வந்து செல்போனை பறித்துச் சென்றனர். இதன் மதிப்பு ரூ. 40 ஆயிரம்.

இது குறித்த புகாரின் பேரில் டிபி சத்திரம் போலீசார் சிசிடிவி காட்சிக கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் டி.பி சத்திரம், 4 வது குறுக்கு சாலையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி மனைவியின் செல்போனை பறித்து சென்றுள்ளார் என கண்டுபிடுக்கப்பட்டது. இன்று காலை டி.பி சத்திரம் போலிசார் மணிகண்டனை கைது செய்து மொபைல் போனை பறிமுதல் செய்தனர்…